Tuesday, August 4, 2015

8. கூறுங்கள் ஐயா (தேவன் கோவில் மணியோசை) **

(தேவன் கோவில் மணியோசை)

கூறுங்கள்-ஐயா இது-போலே இன்பம் வேறொன்றுஉண்டா பார்மேலே
(2)
கூடிக்-கொண்டாடும் ஒற்றுமை போலே எங்கணும் உண்டா ஒரு பேறே

கூறுங்கள் ஐயா இது போலே இன்பம் வேறொன்று உண்டா பார்மேலே
(MUSIC)

ஒன்றாய்-இருந்தால் நன்றாய்-இருப்பாய் என்பதற்கே-நாம் ஒரு-சாட்சி
ஆஹா இது-போல் சங்கம்-எங்கே இருக்குது-என்போர் குரலோசை
அதில் தெளிவுறத் தோன்றும் அவர் ஆசை
அதை அடைந்திடச் செய்வார் தினம் பூசை
 
கூறுங்கள் ஐயா இது போலே இன்பம் வேறொன்று உண்டா பார்மேலே
(MUSIC)
அருமை-அருமை மானிடப் பிறவி என்பது அவ்வையின் குரலோசை
ஐயா-அதற்கும் மேலே-அருமை என்பது-சங்கத்தில் உருவாச்சே
இதில் சண்டையின் ஓசை கிடையாதே -
இங்கு பிளவெனும் பாஷையும் புரியாதே


கூறுங்கள் ஐயா இது போலே இன்பம் வேறொன்று உண்டா பார்மேலே

கூடிக்-கொண்டாடும் ஒற்றுமை போலே எங்கணும் உண்டா ஒரு பேறே
கூறுங்கள் ஐயா இது போலே இன்பம் வேறொன்று உண்டா பார்மேலே


No comments:

Post a Comment